1. தினமும் காலையில் நாம் கோலம் போடும் பழக்கம் நம் நாட்டின் பழமையான வழக்கம் .கோலம் நாம் அரிசி மாவில் தான் போட வேண்டும் ஏன் ஏன்றால் அது மற்ற ஜீவராசிகளுக்கு அதுவே ஆகாரம் . இதனால் நமக்கு புண்ணியம் சேறும்.
2. நாம் தினமும் ப்ரஹ்ம முகூர்த வேலையில் எழுவது மிகவும் நல்லது. அந்த நேரத்தில் நாம் எதை வேண்டுகிறோமோ அது நடக்கும் இது சத்தியம். அவ்வேளையில் தேவர்கள் பூமியை வலம் வருவார்கள்,நாம் வேன்டும் பலனை அருள்வார்கள்.
3.ஆலயத்திற்கு செல்வது மிகவும் நல்லது. நாம் பக்தியுடன் வைக்கும் ஒவ்வோறு அடிக்கும் அஷ்வமேத பலன் கிடைக்கும்.
4. ஆலயத்தில் தீபமேற்றுவது பல தோஷங்களை நிவர்த்தி செய்யும்.
5. தயிரில் கஸ்தூரி மஞ்சள் பொடியை கலந்து தினமும் உடம்பிற்கு பூசி கொண்டால் சருமம் மிருதுவாக இருக்கும் அத்துடன் சரும வியாதி எதுவும் வராது.
6. காரடையான் நோன்பு
இந்த நோன்பு ஆண்டு தோறும் மாசியும் பங்குனியும் கூடும் நேரத்தில் பெண்கள் நோற்கிறார்கள் (14 -3 -2013 ) . (Time: 8-30 P.M. - 9 P.M.)
மாசி மாதம் நிறைவதற்கு முன் தாலிசரடைப் புதுப்பித்துக் கட்டிக் கொள்ள வேண்டும்.பங்குனி பிறந்ததும் நோன்பு சரடை அணிய வேண்டும். இதை அணியும் பொழுது நாம் சொல்லவேண்டிய சுலோகம்
பொருள் : கணவர் நோயற்று நீண்டநாள் வாழ்ந்திட காரிகை நான் காரடையான் நோன்பிருந்தேன். காமாக்ஷி நின் அருளால் நூல் சரடும் நான் அணிந்தேன். கணவனார் ஆயுளுக்கு காப்பு தெய்வம் நீ அம்மா!.
பின்பு கீழ்காணும் வாக்கியங்களை சொல்லவேண்டும்,
" உருகாத வெண்ணெய்யும் ஓர் அடையும் வைத்து நோன்பு நோற்றேன். ஒருநாளும் ஒருபோதும் என் கணவர் என்னை பிரியாமல் இருக்க வேண்டும். இப்படி வேண்டி வழிப்பட்டபின்,முதலில் கணவருக்கு காரடையும் வெண்ணெய்யும் தரவேண்டும். இதன் பின் ஏனையோருக்கு அதனை விநியோகித்து தாமும் உண்டு காரடை நோன்பை நிறைவு செய்ய வேண்டும்.
இந்த நோன்பை செய்வதால் தேவி நமக்கு சௌமாங்கல்யத்தையும், புத்திரர்களையும்,சுகத்தையும் அருள்வாள்.
7.தினமும் காலையில் எழுந்தவுடன் நாம் நம் இரு கைகளையும் சேர்த்து பார்க்க வேண்டும்,அத்துடன் "சீதா,தாரா,அகல்யா,திரௌபதி,மண்டோதரி பஞ்ச கன்யா ஸ்மரேன சர்வ நித்ய பாப விநாசனம்" என்ற ஸ்லோகத்தை சொல்லவேண்டும். இதை சொல்வதால் நாம் தெரியாமல் செய்த அன்றைய பாவம் அன்றே அகலும்.
8. தினமும் காலையில் இரண்டு பாதாம் பருப்பை சாப்பிட்டு வர பலமும்,ஞாபகசக்தியும் கூடும்.
9. தினமும் நான்கு அல்லது ஐந்து சிறு வெங்காயத்தை சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.
10. தினமும் காலையில் நாம் அனைவரும் வீட்டை பெருக்குவோம் அல்லவா. அப்படி பெருக்கும் போது நாம் வீட்டு உள்ளிலிருந்து ஆரம்பித்து வாசல் பக்கமாக பெருக்க வேண்டும்.
11. தினமும் நாம் சாப்பிடுவதற்கு முன் பகவானுக்கு நைவேத்தியம் செய்து விட்டு பிறகு தான் சாப்பிடவேண்டும்,இல்லை என்றால் திருடி சாப்பிடுவதற்கு சமமாகும்.
12. தினமும் ஒரு ஸ்பூம் தேனை சாப்பிட்டுவர உடலில் அண்டி-ஒக்சிதேன்ட்(ANTI-OXIDENT) அதிகமாகும்.இது நமக்கு பாஸ்ட் ஹீலிங் காபசிடியை (FAST HEALING CAPACITY) தரவல்லது.
19. சிவா,விஷ்ணு ஆலயம் அமைத்தல் கைலாசத்திலும்,வைகுண்டத்திலும் ஸ்திரவாசமளிக்கும்.
தான பலன்
வஸ்திர தானம் ஆயுளை வருத்தி செய்யும்
தேன் தானம் புத்திரபாக்கியம் உண்டாகும்
பூமி தானம் பிரம்மலோகத்தை அளிக்கும்
தீப தானம் கண்பார்வை வ்ருத்தி செய்யும்
எருமை தானம் அகால மரணத்தை அகற்றும்
விதை தானம் தீர்க்காயுளை தரும்,தீர்க்காயுள்ள சந்ததி உண்டாகும்.
வைதரணீ கோதானம் இறந்த ஜீவன் 'வைதரணீ" எனும் மிக கோரமான நதியை சுகமாக கடக்க உதவும்.
கோவிலில் தீபதானம் சக்ரவர்த்தி பதவி கிடைக்கும்
அரிசி தானம் பாபத்தை போக்கும்
தாம்பூலம் தானம் சுவர்க்கத்தை தரும்
பழம் தானம் சுவர்க்கத்தை தரும்
கம்பளி தானம் வாயுரோகத்தை நீக்கும்
பருத்தி தானம் வெண் குஷ்ட்டத்தை நீக்கும்
பூணூல் தானம் பிராமண ஜென்மாவை தரும்
நெய் தானம் ரோக நாசனம்
சர்க்கரை தானம் ஆயுள் வ்ருத்தி
கன்யா தானம் பிரம்மலோகம்
விசிறி,பானகம்,நீர்மோர், வாயு,வருனலோக ப்ராப்தி தீர்த்த தானம்
அன்னதானம் ஸ்வர்கம் உண்டாகும்
குடை,பாதுகை தானம் யமலோகத்தில் இன்பம் தரும்.
ஸ்வர்ண தானம் பாபம் அகலும், ஏழ்மை அகலும்.
பாயச தானம் பித்ரு ப்ரீதி ,சந்ததி வ்ருத்தி.
சத்துமாவு தானம் பகவத் பக்தி உண்டாகும்.
கடலை தானம் சந்ததி உண்டாகும்.
அவுல் தானம் தேவப்ரசாடம் உண்டாகும்.
தயிர் தானம் இந்த்ரிய வ்ருத்தி.
தேங்காய் தானம் கவலை அகலும்.
வெள்ளம் தானம் சோகம் அகலும்
வாழைப்பழம் தானம் புத்தி ஸூஷ்மமாகும்.
12 மாதங்களிலும் தானம் செய்ய வேண்டியவை
சித்திரை நீர் மோர், விசிறி, செருப்பு,தயிர் சாதம்
வைகாசி பானகம்,ஈயபாதிரம்,வெல்லம்.
ஆனி தேன்.
ஆடி வெண்ணை
ஆவணி தயிர்
புரட்டாசி சர்க்கரை
ஐப்பசி பரமான்னம்
கார்த்திகை பால்,தீப தானம்
மார்கழி பொங்கல்.
தை தயிர் ஏடு
மாசி நெய்
பங்குனி தேங்காய்
20. தினமும் காலையில் ஒரு டம்ளர் கொத்தமல்லி தண்ணீர் குடித்து வர கிட்னி (kidney)சுத்தமாகும் மற்றும் உடலில் உள்ள விஷத்தன்மை நீங்கும்.
21. தினமும் காலையில் ஒரு சிறு கொத்து துளசி இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடு வர, சக்கரை நோயின் அளவு கட்டுபாட்டில் இருக்கும்.
22. தினமும் ஒரு "வால்நட்" சாப்பிட்டு வர, வயிறு சுத்தமாக இருப்பதுடன் வயிற்றில் பூச்சி சேராது.
23. ஒரு டம்ளர் நீரில் இரண்டு ஸ்பூன் எளிம்பிச்சை சாறு, மூன்று ஸ்பூன் தேன்,கால் ஸ்பூன் உப்பு கலந்து பருகினால், உடலில் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறலாம்.
24. சிறுது தேங்காய் எண்ணையில், சில துளிகள் தேனை விட்டுக் குழைத்து வாயில் புண் இருக்கும் இடங்களில் தடவவும். எச்சிலை துப்பாமல் விழுங்கவும்.இப்படி செய்தால் வாய் புண் குணமாகும்.
25 தினமும் அதிகாலையில் தண்ணீர் குடித்தால்(6 -8 glasses ) 32 வியாதிகள் குணமாவதாக ஜப்பான் இயற்க்கை மருத்துவம் கூறுகிறது.
26 சுத்தமான நல்லெண்ணையை வாயில் கொஞ்ச நேரம் வைத்துக் கொண்டு துப்பிட வேண்டும்.இப்படி செய்வதால் வாய் எலும்புகளுக்கு வலிமை உண்டாகிறது. முகத்திற்கு மிகுந்த கவர்ச்சி உண்டாகிறது. நாக்குக்கு சுவைகளை அறியும் சக்தி வளர்கிறது. பல்வலி, பல் கூச்சம் குறைகிறது. பற்களுக்கு பலம் உண்டாகிறது. அதை தவிர 64 வகையான வியாதிகள் குணமடைகிறது.
27 தினந்தோறும் இரண்டு சொட்டு நல்லெண்ணையை நாசியம் (மூக்கில் நல்லெண்ணையை வைத்துக் கொண்டு உறிஞ்சுவது) செய்வதால் கண்,மூக்கு,காது,இவைகள் கெடுதியை அடைவதில்லை. கூந்தல்,தாடி,மீசை இவைகள் வெளுப்பாகவோ,செம்படை நிரமுள்ளதாகவோ ஆவதில்லை. தலை மயிர் உதிர்வதில்லை.மேலும் நன்றாக வளர்கிறது. தோள்பட்டை வாதம், தலைவலி,ஆகியவை நீங்குகிறது. முகம் அழகுள்ளதாகவும்,கவர்ச்சி உள்ளதாகவும், சகல இந்திர உறுப்புகளுக்கு தெளிவு உண்டாகிறது. இதை காலை,இரவு இரண்டு முறை செய்யவும்.(நீடித்த ஜதோஷம் உள்ளவர்களுக்கு நாசியம் கூடாது).
28. மாசி மாதத்தில் தேய்பிறையில் வரும் சதுர்ததசி திதி (சிவராத்திரி), செவ்வாய் அல்லது வெள்ளிகிழமையில் வந்தால் அது முக்கோடி புண்ணிய சிவராத்திரி எனப்படும். அந்த நாளில் விரதம் இருப்பதும் சிவா பூஜைகள் செய்வதும், தானமளிப்பதும் மூன்று கோடி மடங்கு புண்ணியம் அளிக்கும் என்பது ஐதிகம்.
29. சிவராத்திரி நாளில் ருத்ராட்சம், சிவலிங்கம்,விபூதிபை, பசு, பூமி தானமளிப்பது மிகச் சிறந்த பலனை தரும்.
30. சிவராத்திரி விரதம் இருந்தே பார்வதி பரமனை மணந்தால். திருமால் திருமகளோடு சக்ராயுதம் பெற்றார். நான்முகன் கலைமகளை மணந்தார்.
அபிஷேக பலன்கள் 1 . மாப்பொடி அபிஷேகம் - கடன் தொல்லை தீரும்
2 கரும்புச்சாறு அபிஷேகம் - ஆரோக்கியம் தரும்.
3 . பசுந்தயிர் அபிஷேகம் - குழந்தைபாக்கியம் தரும்.
4 எளிம்பிச்சை சாறு அபிஷேகம் - பயத்தை போக்கும்
5 பசும்பால் அபிஷேகம் - ஆயுள்வ்ருத்தி அளிக்கும்.
6 தேன் அபிஷேகம் - இனிமையான வாழ்வும்,குரலும் கிடைக்கும்.
7 சுத்த தண்ணீர் அபிஷேகம் - காரியசித்தி.
8 பஞ்சாம்ருதம் அபிஷேகம் - உடல் நலம்பெறும்,செல்வம் பெருகும்.
9 சந்தனம் அபிஷேகம் - எட்டு வித செல்வம் கிடைக்கும்.
10 இளநீர் அபிஷேகம் - குடும்ப ஒற்றுமை பெருக.
11 நல்லெண்ணெய் அபிஷேகம் - எல்லா ப்ரச்சனைகளும் விலக
மருதமரம் பலன்கள் மருதமலை பட்டையை சூரணம் செய்து குடித்துவர ரத்தக் குழாய்களில் கொழுப்பு படியாமல் தடுப்பதற்கு மறுத்த மரப்பட்டையில் உள்ள 'அர்ஜுனின்' என்கின்ற வர்த்திப் பொருள் பயன்படுவதை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்திக்கின்றனர்.
ரத்தபேதி மற்றும் சீதபேதி ஏற்ப்பட்டால்,அரச இலைக் கொழுந்தை மென்று விழுங்கினால், உடனடியாக குணமாகும்.
இல்லை,பூ,காய் ஆகியவற்றைச் சம அளவில் எடுத்துக் கொதிக்கவைத்துக் குடிநீராக்கிக் குடித்தால், ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் மற்றும் வெள்ளை அணுக்களின் அளவு அதிகரிக்கும்.
இலையை அரைத்துப் பாலில் கலந்து, காலை-மாலை இரு வேலையும் தொடர்ந்து 5 நாட்கள் வரை குடித்து வந்தால்,பித்த வெடிப்புகள் நீங்கும். இதன் பழத்தை நீராவியில் வேகவைத்து, பிசைந்து புண்களில் வைத்துக் கட்டினால்,புண்கள் விரைவில் ஆறும்.
மருதப்பட்டை கஷாயத்தை ஒருவர் தொடர்ந்து குடித்துவந்தால், பக்கவாதம் வராமல் தடுக்க முடியும் மற்றும் இதை 60 மி.லி. குடித்தால் போதும் பித்தம்,வெள்ளைபடுதல்,மாதவிலக்கு,சரும நோய்கள் போன்றவர்வர்ருக்கு நிவாரணம் கிடைக்கும்
சம்பா கோதுமை, கைகுத்தல் அரிசி, கேழ்விறகு முதலியவற்றில் புற்றுநோய், இரத்தக்கொதிப்பு முதலியவற்றைத் தடுக்கும் உயிர்ச்சத்துக்கள் ஏராளமாக இருப்பதாக ஆரழ்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மேலும் சோயா மொச்சையில் புற்றுநோயை முற்றிலும் அழிக்கும் சக்தி உள்ள பொருட்கள் இருப்பதாகவும் கண்டுபிடித்துள்ளார்கள். இவைகளை உணவில் அதிக அளவில் சேர்த்து கொள்ள நலமுடன் வாழலாம்.
பப்பாளியை அடிக்கடி சாப்பிட்டால் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கருப்பு திராட்சையை அடிக்கடி சேர்த்து வர எலும்பு வலுப்பெறும்.
வாழ்க்கையில் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியவைகள்