This stothiram was said by Lord Indira to attain all prosperity and blessings from Devi Mahalakshmi.Devi also given the promise that who ever utter this stothiram daily will get complete blessings from her and will attain health,wealth throughout their life.This is a Tamil stotiram.
சகல உலகத்தர்க்கும் தாயாராய் திருபாற்கடலில் திரு அவதாரம் செய்தவலாய் மலர்ந்த தாமரை போன்ற திரு கண்களை உடையவலாய் திருமாலின் திருமார்பில் எழுந்தருளிருக்கும் ஸ்ரீ தேவிக்கு தெண்டம் சமர்பிக்கிறேன். தாமரை மலரில் வீற்றிருந்து தாமரை மலரை திரு கையில் தரித்து தாமரை மலர் போன்ற திருவிழிகளுடன் தாமரை மலரை ஒத்த திருமுகமண்டலம் உள்ளவலும் உந்தி தாமரை பூத்தவளின் திருவுள்ளத்திற்கு உகந்தவளுமான ஸ்ரீ தேவியை செய்விக்கிறேன் உலகங்களை தூய்மை செய்து அருள்கின்ற தாயே, சித்தியும், ச்வஹையும், கதையும், சொதையும்,சந்தியும், ராத்ரியும், பிரேமையும், மேதையும், ஸ்ரத்தையும்,சரஸ்வதியும் எல்லாம் நீயே!சகல மங்கள ஸ்வரூபிணியான தாயே, யக்ஞ வித்தை என்கின்ற கர்ம மீமாம்சையும்,மகாவித்தை என்கின்ற இன்திரஜாலவித்தையும் குஹ்யவித்தை என்கின்ற வேதாந்த வித்தையும் நீயே ! தர்க்க வித்தையும் கிரிஷி கோரக்ஷன வாணிப வித்தையும், தண்டநீதி வித்தையும் நீயே ! இவ்விதம் சாந்தங்கலாகவும்,அசாந்தங்கலாகவும் இருக்கிற உருவங்களை கொண்டு மூன்று உலகங்களையும் நீயே நிறைந்திருக்கிறாய். தாயே! சகல யக்ஞா சொரூபனாகவும் மகாயோகிகளுக்கும் தியானித்து அறியத்தக்க தேவதேவனுமான கதாதரனின் திருமேனியில் உன்னை தவிர வேறு யார்தான் வீற்றிருக்க முடியும்? வுலக மாதாவே ! உன் கடாட்சத்தை இழந்த போது மூன்று உலகங்களும் நாசமடைந்தவை போலாகி திரும்பவும் உனது கடாட்சத்தை பெற்றதால் சௌபாக்கியங்களை பெற்றன. தாயே ! கருணை நிறைந்த உனது கடட்ச்சவீட்ச்சன்யத்தாலே பிராணிகளுக்கு பாரியா, புத்திர, பந்து, மித்திர, கிரக, க்ஷேத்திர,தான வாகனாதிகள் எப்பொழுதுமே உண்டாகின்றன. என்பெருமாட்டியே!உன் கடாக்ஷம் பெற்றவர்களுக்கு உடல் ஆரோக்யமும், அதிகாரமும், சத்துரு வெற்றியும் சுகமும் கிடைப்பது அரிதல்ல. பிராட்டியே! சகல பிரபஞ்சத்துக்கும் நீயே அன்னை,தேவதேவனான நாராயணே தந்தை!தாயே! நீங்கள் இருவரும் சேர்ந்தே சராசர ஸ்வரூபமான இந்த பிரபஞ்சமெல்லாம் வியாபித்திருக்கிரீர்கள். ஸ்ரீ விஷ்ணுவின் திருமார்பில் வீற்றிருக்கும் தாயே! அடியேங்களது புத்திர, மித்திர வர்க்கங்களையும், பசுக்களையும், பூஷணங்களையும் ஒருநாளும் பிரியாது இருந்தருள வேண்டும். நிர்மலையான தாயே! உன் கடாட்சம் தூரமானால் மக்கள் சௌசீல மகா குணங்களும் தான தானியமும் இல்லாமல் போவார்கள். குனஹீனராயினும் உன் கடாட்சம் பெற்றவர்கள், எல்லா சௌபாக்கியங்களையும் பெற்று பிரபுக்களாக வாழ்வார்கள். ஸ்ரீ விஷ்ணு வல்லபையான தாயே! உன் கருணைக்கு பாத்திரமானவனே குணவான், புண்யவான், புத்திமான், சூரன், பராக்ரமசாலியாவான். ஜகத்தை எல்லாம் வளர்க்கும் தாயே! நீ வெறுத்தால் ஒருவனுடைய வாய்மை, சமதர்மம் முதலிய சர்குணங்களும் துர்குணங்களாகிவிடும். உனது திருகலான குணங்களை நான்முகன் பிரம்மனாலும் துதிக்க இயலாதே, அப்படி இருக்க அடியேன் எப்படி புகழ்வேன். ஆயினும் தாயே கருணை கூர்ந்து எம்மை காத்து அருளவேண்டும்.
லக்ஷ்மி நாராயணாய நமஹா.
பூர்வத்தில் ஸ்ரீதேவி பிருகு முனிவருக்கு கியாதி என்ற மங்கையினிடத்தில் அவதரித்தாள். பிறகு அம்ருதம் கடைந்த காலத்தில் திருபார்கடளிலும் அவதரித்தாள், அதுமட்டுமல்ல உலகநாதரான ஜனார்த்தனன் எப்போதெல்லாம் உலகங்களில் அவதரிப்பாரோ, அப்போதெல்லாம் ஸ்ரீதேவியும் அவனுடன்கூட அந்த அவதாரம் பயன்பெற அவதாரம் செய்து அருள்வாள்.முன்பு ஸ்ரீமான் நாராயணன் அதிதியின் குமாரனாக அவதரித்தபோது ஸ்ரீதேவி பிராட்டியார் பதுமை என்ற திருபெயரோடு அவதரித்தாள். விஷ்ணு பரசுராமனாக அவதரித்த போது , அவள் தராணியாக அவதரித்தாள். அவன் சக்கரவர்த்தி திருமகன் ராமனாக அவதரித்த போது இவள் சீத பிராடியாக அவதரித்தாள். எம்பெருமான் கண்ணனாக அவதாரஞ் செய்த போது, இவள் ருக்மிணியாக அவதரித்தாள். இதுபோலவே மற்றைய அவதாரங்களிலேயும் இப்பிராட்டி, பெருமாளை விட்டு பிரியாமல் கூடவே அவதரித்துக் கொண்டிருப்பாள். என்பெருமான் தேவதா சொருபத்தோடு அவதரித்தாள் ஸ்ரீதேவியும் அதற்கேற்ப தெய்வதிருமேனியுடன் அவதரிப்பாள். மனுஷ்ய சொரூபத்தோடு பெருமாள் அவதரித்தாள் ஸ்ரீதேவியும் மனுஷ்ய ரூபத்தோடு அவதரிப்பாள். ஸ்ரீமகாலக்ஷ்மியின் இந்த திரு அவதாரத்தை எந்த மனிதன் பக்தியுடன் பாராயணஞ் செய்கிறானோ, எவன் பக்தியோடு கேட்கிறானோ, அவனுடைய இல்லத்தில் பெரிய பிராட்டியரான ஸ்ரீதேவி என்றும் பிரியாமல் எழுந்தருளிருப்பாள். எந்த க்ரஹத்திலே இந்த ஸ்ரீதேவியின் சரித்திரம் தினந்தோறும் படிக்கப்படுகிறதோ அந்த கிரகங்களில் கலகத்திற்கு ஆதாரமான வறுமை இராது. இந்திரனால் சொல்லப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தை யாராகிலும் பக்தியுடன் படிபார்கலானால், அவர்கள் சர்வாபிஷ்டங்களும் நிறைவேறி சிறப்பாக வாழ்வார்கள்.