மூலக்கனலே சரணம் சரணம் முடியா முதலே சரணம் சரணம் கோலக் கிளியே சரணம் சரணம் குன்றாத ஒலிக்குவையே சரணம் நீலத் திருமேனியிலே நினைவாய் நினைவர்றேளியேன் நின்றேன் அருள்வாய் வாலைக் குமரி வருவாய் வருவாய் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!
முத்து
முத்தே வரும் முத்தொழிலார் றிடவே முன்னின்றருளும் முதல்வீ சரணம் வித்தே விளைவே சரணம் சரணம் வேதாந்த நிவாசினியே சரணம் தத்தேறிய நான் தனயன் தாய் நீ சாகாதவரம் தரவே வருவாய் மத்தேறு ததிகினை வாழ்வுடையேன் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!
பவளம்
அந்தி மயங்கிய வானவிதானம் அன்னை நடனம் செய்யும் ஆனந்த மேடை சிந்தை நிறம் பவளம் மொழிபாரோர் தேம்பொழிலாமிது செய்தவலாரோ எந்தை இடத்தும் மனத்தும் இருப்பாள் எண்ணுபவர்க்கருள் எண்ணமிகுந்தால் மந்திர வேதமயப்பொருள் ஆனால் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!!