மாசி மாதத்தில் வீடு குடி போனால் வாடகை வீடாக இருந்தாலும் அவ்வீட்டில் அதிக நாட்கள் வாழ்வார்கள்.
மாசிப்பூனால் மணிபூனால் என்பர். அதனால் இம்மாதத்தில் உபநயனம் செய்வது சிறப்பானது.
குடந்தையில் உள்ள மகாகுளத்தில் 66 கோடி தீர்த்தங்கள் கலந்துள்ளன. 9 நதிகளும் மாசியில் வந்து கூடுகின்றன. இக்குளத்தில் 16 ஊற்று கிணறுகள் இருக்கின்றன. இக்குளத்தில் அமிர்தம் கலந்துள்ளதால் எப்போது நீராடினாலும் புண்ணியம். அதுவும் மாசிமகத்தன்று நீராட ஏராளமான புண்ணியம் சேரும்.
மாசி மகாகுலத்தை ஒரு முறை சுற்றி வந்தால் பூமியை 100 முறை வளம் வந்த பலன் கிட்டும். இக்குளத்தை வணங்கினால் சிவபிரானோடு எல்லா தேவர்களையும் வணங்கிய பலன் கிடைக்கும்.இக்குளத்து நீரை சிறிதளவு உட்கொண்டாலே சகலவித பாவங்களும் தீரும். இங்கு நீராட வேண்டுமென மனத்தால் நினைத்தாலே கூட புன்னுயம் சேரும்.
மாசிமக ஸ்நானம் செய்வோருக்கு சிவனும்,விஷ்ணுவும் உரிய பலன்தரக் காத்திருப்பார். அன்று புண்ணியனதியில் ஒருமுறை மூழ்கி எழுவோருக்கு பாவங்களை விளக்குவார்கள். இரண்டாம் முறை மூழ்கி எழும் போது சொர்க்கபேறு தருவர். மூன்றாம் முறை மூழ்கி எழும் போது அவர்கள் புண்ணியத்திற்கு ஈடான பலனாக எதை கொடுக்கலாம் என் ஈசனே தினருவாராம்.இந்நீராடல் செய்ய இயலாதோர் மாசிமக புராணம் படிக்கலாம் அல்லது கேட்கலாம். அதுவும் புண்ணியமே.
மாசிமகத்தன்று கடல் நீராடலாம். அப்போது பூமியில் காந்தசக்தி உண்டாவதால் நீர் நிலைகளில் புத்துய ஊற்றுகள் உண்டாகி அதில் காந்த சக்தி கரையும். அச்சமயத்தில் நீராடுவோர் மனமும் உடலும் ஆரோக்யமாகும். இதை புராணமும் சொல்கிறது. விஞ்ஞானமும் சொல்கிறது.
தொடர்ந்து 5 வருடங்கள் மாசிமகத்தன்று மகாமகக் குளத்தில் மூழ்கி எழுவதால் புத்திரபாக்கியம் கிட்டும். மகாமகத்தன்று நீராடினால் வாரிசுகளின் ஆரோக்யமும் ஆயுளும் அதிகரிக்கும்.